COVID-19 வைரஸ் மற்றும் அறிகுறிகள் | The COVID-19 virus and symptoms
COVID-19 என்றால் என்ன?
COVID-19 என்பது கொரோனா SARS-CoV-2 வைரஸினால் உண்டாகிறது. அது உங்கள் நுரையீரல், சுவாசப்பாதைகள் மற்றும் பிற உறுப்புகளைப் பாதிக்கிறது.
கொரோனா வைரஸ்கள் நோய்களை உண்டாக்கும் ஒரு பெரிய வைரஸ்களின் குடும்பத்தைச் சார்ந்தவை. இது சாதாரண சளி, கடுமையான தீவிர சுவாச நோய்க்குறி (SARS) மற்றும் மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி (MERS) போன்றவற்றை உள்ளடக்கும்.
SARS-CoV-2 முதன்முதலில் சீனாவில் கண்டறியப்பட்டதுமற்றும் விலங்குகளில் தோன்றியிருக்கலாம். வைரஸ் மனிதர்களை எவ்வாறு தொற்றியது என்பது இன்னும் தெளிவாக இல்லை. COVID-19 வைரஸும் மனிதர்களுக்கு ஏற்ப தன்னை பிறழ்வாக்கிக் கொண்டுள்ளது. இந்த பிறழ்வுகளில் சில, டெல்டா மாறுபாடு போன்றவை, அசல் வைரஸை விட மிக எளிதாகப் பரவி மிகவும் கடுமையான நோயை உண்டாக்கும்.
COVID-19 அறிகுறிகள்
அறிகுறிகள் பின்வருமாறு:
- புதிய அல்லது மோசமாகும் இருமல்
- காய்ச்சல்
- சுவாச பிரச்சினை
- தொண்டை எரிச்சல்
- தும்மல் மற்றும் மூக்கு ஒழுகுதல்
- தற்காலிக வாசனை இழப்பு அல்லது சுவையின் மாற்றம்.
இந்த அறிகுறிகள் இருந்தாலும் உங்களுக்கு COVID-19 உள்ளது என்று அர்த்தமாகாது. இந்த அறிகுறிகள் அதிகளவில் பொதுவான நோய்களான ஜலதோஷம் மற்றும் ஃப்ளூ போன்றவற்றிற்கு ஒத்ததாக இருக்கும்.
சுவாச பிரச்சினை என்பது சாத்தியமான நிமோனியாவின் அறிகுறியாகும் மற்றும் இவற்றிற்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவை.
உங்களுக்கு ஜலதோஷம், ஃப்ளூ அல்லது COVID-19 அறிகுறிகள் இருந்தால் உங்கள் மருத்துவரையோ அல்லது ஹெல்த்லைன் எண் 0800 358 5453 யோ அழையுங்கள் மற்றும் சோதனை செய்துகொள்வதை பற்றி ஆலோசனை பெறுங்கள்.
அதிகளவில் காணப்படாத அறிகுறிகள்
சில மக்களுக்கு சமயங்களில் அதிகளவில் காணப்படாத அறிகுறிகளும் கொண்டிருப்பார்கள் அதாவது பின்வருபனவற்றை மட்டுமே:
- வயிற்றுப்போக்கு
- தலைவலி
- தசை வலி அல்லது உடல் வலி
- குமட்டல்
- வாந்தி
- உடல்நலக்குறைவு — ஒரு பொது அசவுகரிய உணர்வு, நோய் அல்லது அமைதியின்மை
- நெஞ்சு வலி
- வயிற்றுவலி
- மூட்டு வலி
- குழப்பம் மற்றும் எரிச்சல்
ஒரு மனிதருக்கு தொற்று ஏற்பட்டு 14 நாட்கள் வரை பொறுத்து அறிகுறிகள் தென்படலாம். அறிகுறிகள் தோன்றுவதற்கு 2 நாட்கள் வரை முன்பிருந்தே. தங்களுக்கு இருப்பது தெரியாமலேயே வைரசை நோய்தொற்று கண்டவர்கள் மற்றவர்களுக்கு பரப்பலாம். யாரேனும் தங்களிடம் கோவிட்-19 இருப்பதை அறிவதற்கு முன்பே அதை அனுப்ப முடியும் என்பதே இதன் பொருள்.
COVID-19 எப்படி பரவுகிறது
COVID-19 திரவத்துளிகள் மூலம் மனிதருக்கு மனிதர் பரவுகிறது. நோய்தொற்று ஏற்பட்ட ஒரு நபர் இருமும்போதும் தும்மும்போதும் அல்லது பேசும்போதும் வைரஸ் கொண்ட திரவதுளிகளை பரவ செய்யலாம்.
COVID-19 பரவுவதற்கான ஆபத்து அதிகம்:
- நல்ல காற்றோட்டம் இல்லாத மூடப்பட்ட இடங்களில்
அருகில் பலர் இருக்கும் இடங்களில் - நெருக்கமான உரையாடல்கள், பாடுதல் அல்லது கூச்சலிடுதல்
- போன்ற நெருக்கமான தொடர்பு அமைப்புகளில்.
மக்கள் ஒருவருக்கொருவர் உடல் ரீதியாக விலகி இருந்தால், வெளியில் ஆபத்து குறைவாக உள்ளது, குறைவான நபர்களுடன்.
உங்களையும் மற்றவர்களையும் எவ்வாறு பாதுகாப்பது
இந்த எளிய வழிமுறைகள் வைரஸின் பரவலை மெதுவாக்கும் மற்றும் உங்களையும், உங்கள் whānau யும், உங்கள் சமூகத்தையும் COVID-19 இலிருந்து பாதுகாக்க உதவும்.
- உங்களுக்கு ஜலதோஷம், ஃப்ளூ அல்லது COVID-19 அறிகுறிகள் இருந்தால், வீட்டில் இருந்த படியே, உங்கள் மருத்துவரையோ அல்லது இலவச ஹெல்த்லைன் எண் 0800 358 5453 யோ, அழையுங்கள் மற்றும் சோதனை செய்துகொள்வதை பற்றி ஆலோசனை பெறுங்கள்.
- உங்கள் முழங்கைக்குள் இருமுங்கள் மற்றும் தும்முங்கள்.
- உங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்களிடம் இருந்து சமூக விலகலை கடைபிடியுங்கள்.
- தேவைப்படும் போது அல்லது உடல் ரீதியான இடைவெளி கடினமாக இருக்கும் போது முகக் கவசத்தை அணியுங்கள்.
- NZ கோவிட் ட்ரேசர் செயலி அல்லது விரிவான எழுதப்பட்ட குறிப்புகளுடன் நீங்கள் எங்கு சென்றீர்கள் என்பதைக் கண்காணிக்கவும்.
- பகிரப்பட்ட மேற்பரப்புகளை அடிக்கடி சுத்தம் செய்யவும் அல்லது கிருமி நீக்கம் செய்யவும்.
- உங்கள் கைகளை வழக்கமாக கழுவி நன்றாக உலர வைக்கவும்.
Last updated: at