வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளல் | Isolating at home
நீங்கள் எப்போது தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்
நீங்கள் COVID-19 நேர்மறை சோதனை முடிவைப் பெற்றால் மட்டுமே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.
தனிமைப்படுத்தலை நீங்கள் உங்கள் வீட்டிலேயோ தகுந்த மாற்று தங்குமிடத்திலேயோ மேற்கொள்ளலாம்.
எவ்வளவு காலம் நீங்கள் சுய-தனிமைப்படுத்தல் மேற்கொள்ள வேண்டும்?
COVID-19 இலிருந்து குணமடையும் காலகட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 7 நாட்களுக்கு சுய-தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். நீங்கள் இன்னமும் உடல்நலமில்லாமல் இருந்தால் வீட்டிலேயே தங்குங்கள். நாள் பூஜ்ஜியம் (0) இலிருந்து 7 நாட்களை கணக்கிடவும். நாள் 0 என்பது உங்கள் அறிகுறிகள் துவங்கிய தினம் அல்லது நீங்கள் நேர்மறை சோதனை முடிவை பெற்ற தினம் (உங்களுக்கு அறிகுறிகள் எதுவும் ஏற்படவில்லை என்றால்).
சுய-தனிமைப்படுத்தல் எதை உள்ளடக்குகிறது
சுய-தனிமைப்படுத்தல் என்பது நீங்கள் வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும் என்ற கட்டாயத்தின் போது வீட்டை விட்டு வெளியேற மிக குறைந்த காரணங்களை தவிர அங்கேயே தங்கியிருத்தலை குறிப்பது. இது நீங்கள் உடன் வசிப்பவருடன் நெருங்கிய தொடர்பை தவிர்க்கும் முகமாக பொது-அறிவு சார்ந்த முன்னெச்சரிக்கைகளை கடைபிடிப்பதையும் குறிப்பது.
சுய-தனிமைப்படுத்தலுக்கான ஆலோசனை:
- உங்கள் வீட்டிலேயோ தகுந்த மாற்று தங்குமிடத்திலேயோ தங்குங்கள். உங்கள் அறையை மற்றவர்களுடன் பகிராதீர்கள் மற்றும் சாத்தியமானால் உங்களுக்கென பிரத்தியேக கழிவறையை பயன்படுத்துங்கள்.
- கூடுமானவரை வீட்டிலேயோ உங்கள் தோட்டத்திலேயோ அல்லது உங்கள் சுற்றுப்புறத்தில் மற்றவர்களிடமிருந்து வெகுவாக விலகியோ உடற்பயிற்சி செய்யுங்கள். பொது நீச்சல் குளம் போன்ற எந்த பகிரப்படும் வசதிகளிலும் நீங்கள் உடற்பயிற்சி செய்யமுடியாது.
- உடன் வசிப்பவர்களிடமிருந்து தொடர்பை மட்டுப்படுத்திக்கொள்ளுங்கள். முடியாதெனில் மற்றவர்களுக்கு அருகில் இருக்கும்போது நீங்கள் குறைந்தபட்சம் 1.5 மீட்டர்களாவது ஒதுங்கியிருக்க வேண்டும் மற்றும் உங்கள் நாசி மற்றும் வாயை மறைக்கும் வண்ணம் முககவசம் அணிய வேண்டும்.
- உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பொருட்களை பகிர்ந்துக்கொள்ளாதீர்கள்.
- உங்கள் துணிகளை நீங்களே துவைத்து அவற்றிற்கு இஸ்திரி போடுங்கள்.
- உங்கள் வீட்டிற்குள் வருகையாளர்கள் எவரையும் அனுமதிக்காதீர்கள்.
- மேற்பரப்புகளை தவறாமல் சுத்தம் செய்து கிருமிநீக்கம் செய்யுங்கள்.
- மலர்ச்சியான காற்று உள்ளே வருவதற்கு சாளரங்களை திறந்து வையுங்கள்.
- நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களின் உதவியை நாடி உணவு, மருந்துகள் அல்லது அத்தியாவசிய பொருட்களை கதவருகில் வைக்கவோ அல்லது வெளியிலிருந்து அவற்றை தருவிக்கவோ ஏற்பாடு செய்யுங்கள்.
உங்களால் வீட்டிலேயே சுய-தனிமைப்படுத்தல் மேற்கொள்ள முடியவில்லை என்றால்
வீட்டிலேயே சுய-தனிமைப்படுத்திக் கொள்வது உங்களுக்கு பாதுகாப்பாற்றதாக இருந்தால் உங்களுக்கு மாற்று தங்குமிடம் கிடைக்கப்பெறலாம். இதை நீங்கள் ஆன்லைன் படிவம் மூலம் கேட்டுப்பெறலாம்.
COVID-19 தொற்று ஏற்பட்ட ஒருவருடன் இணைந்து வாழ்ந்தால்
COVID-19 நோய்தொற்று உள்ள ஒருவருடன் நீங்கள் வசித்தால் தினசரி 5 நாட்களுக்கு சோதனை செய்துகொள்ள பரிந்துரைக்கிறோம். நீங்கள் நேர்மறையான சோதனை முடிவை பெற்றால் அனைத்து சுய-தனிமைப்படுத்தல் விதிகளையும் பின்பற்றுங்கள்.
நீங்கள் தினசரி எதிர்மறை முடிவை பெற்றால் மட்டுமே வீட்டை விட்டு வெளியேறலாம்.
வீட்டிற்கு வெளியே இருந்தால் முககவசம் அணியுமாறு உங்களுக்கு பரிந்துரைக்கிறோம், குறிப்பாக அபாயத்திலுள்ளவர்களை சந்திக்க செல்லும்போது (முதியோர் அல்லது நோயெதிர்ப்பு ஆற்றல் குறைந்தவர்களை), பொது போக்குவரத்தை பயன்படுத்தும்போது அல்லது நெரிசல்மிகுந்த உட்புற வளாகங்களில் இருக்கும்போது.
உங்களுக்கு வீட்டு ஆதரவு சேவைகள் தேவைப்பட்டால்
கழிவறை உதவி, துவைத்தல் மற்றும் உணவு ஊட்டுதல் போன்ற அத்தியாவசிய பராமரிப்பு சேவைகள் தடையின்றி தொடரலாம்.
நீங்கள் நோய்தொற்று உள்ள ஒருவரின் குடும்ப தொடர்பு என்று அடையாளம் காணப்பட்டால் பராமரிப்பாளர்கள் நல்ல கை சுகாதாரம் மற்றும் சாத்தியமானால் சமூக இடைவெளியை பேணவேண்டும். இது சாத்தியமில்லை என்றால் தனிநபர் பாதுகாப்பு கருவிகளான டிஸ்போசபிள் கையுறைகள் மற்றும் முககவசங்களை பயன்படுத்த வேண்டும்.
ஆதரவு ஊழியர்களுக்கான தகவல் (external link)
நீங்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமென்றால்
உங்களுக்கோ அல்லது நீங்கள் பராமரிப்பு வழங்கும் ஒருவருக்கோ தீவிர அறிகுறிகள் தோன்றினால் 111 என்ற எண்ணை உடனடியாக அழையுங்கள். தீவிர அறிகுறிகள் பின்வருமாறு:
- சுவாசிப்பதில் சிரமம்
- மயக்கமாக உணருதல், மயக்கமடைதல் அல்லது உறக்கத்திலிருந்து விழிப்பதில் சிரமம்
- வாயின் ஓரம் நீல அல்லது வெளிர் நிறம் மற்றும் ஜலதோஷம்
- கடுமையான நெஞ்சுவலி.
நீங்கள் மேலும் அதிக தீவிரமாக நோய்வாய்ப்பட்டிருந்து உங்களுக்கு மருத்துவமனை பராமரிப்பு தேவைப்பட்டால் நீங்கள் வீடு திரும்பவும் வாடிக்கையான செயல்பாடுகளை தொடரவும் உங்களுக்கு அதிக காலம் தேவைப்படும். இது ஒவ்வொரு நோயாளியை பொறுத்து ஒரு மருத்துவரால் மதிப்பீடு செய்யப்படும்.
COVID-19 தொடர்பான மருத்துவ செலவுகளுக்கு கட்டணம் இல்லை.
உங்களுக்கு ஆதரவு தேவைப்பட்டால்
பெரும்பாலானவர்கள் சுய-தனிமைப்படுத்தலை நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் மேற்கொள்ள முடியும். ஆனால் தேவைப்பட்டால் உதவியும் கிடைக்கும்.
குடும்பங்கள் மற்றும் தனிநபர்களுக்கான ஆதரவு
Last updated: at